Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
அரியலூர் : சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுகவை சேர்ந்த வேட்பாளர் வழக்கறிஞர் சின்னப்பா தனது பிரச்சாரத்தை தொடங்கினார். தமிழகத்தில் அடுத்த மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து பிரச்சாரத்தையும் ஆரம்பித்துள்ளனர். அந்தவகையில் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் மதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் சின்னப்பா போட்டியிடுகிறார்.
இதனையொட்டி தேர்தல் பிரச்சாரத்தை அரியலூர் அருகேயுள்ள பொய்யாதநல்லூர் கிராமத்தில் வேட்பாளர் சின்னப்பா தொடங்கினார். மேலும் பொதுமக்களிடம் வாக்கு கேட்கும் போது பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் வருவதற்கும், தொகுதி முன்னேற்றம் அடையவும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.
மேலும் பல்வேறு கிராங்களிலும் திமுக கூட்டணியினர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.